Saturday, July 12, 2008

ஜாதக விஞ்ஞானிகள



வறண்ட தொண்டையும்
வற்றிய வயிறுமாய்
ஏழாமிட சூரியப்பெயர்ச்சியை
வழியின் விழியாய் எதிர் நோக்கியிருக்கிறேன்
விரதத்தை விலக்கிக்கொள்ள

சுக்கிர உக்கிரமம் தணியட்டுமென்று
இயற்கை உபாதைகளை கூட
அந்தந்த இடங்களில்
அப்படியே இறுக்கியிருக்கிறேன்.

ராகுவும் கேதுவும் சற்று ஒழியட்டுமென்று
வாசல் தட்டிய தாபல்காரனையும்
வாசலோடு வைத்திருக்கிறேன்

மிதுன கோபால்
மேஷ ரமேஷ்
கடக சுந்தர்
நண்பர்களைக்கூட
இப்படித்தான் அழைக்கிறேன்

நெஞ்சைப்பிடித்து சாய்ந்த தந்தையையும்
வராண்டாவில் கிடத்திவிட்டு
சனியின் அனுகூலத்தை
நாட்காட்டியில் மேய்கிறேன்

கணிணியில் நிரல் எழுதும்
விஞ்ஞான யுகத்தில்
கணிணியில் ஜாதகம் எழுதும்
விஞ்ஞான ஜோஸியன் நான்.


எஸ்.எம்.ஜுனைத் ஹஸனி
junaidhasani@gmail.com