சுழலும் மின்விசிறியில்
இரைந்து கொண்டிருக்கின்றன
உன் நியாபகங்கள்
அணைக்கப்பட்ட மின் விளக்குகளில்
அணையாமல் சுடரிட்டுக்கொண்டிருக்கின்றன
நம் அந்தக் கால அந்திமங்கள்
வண்டூரும் சப்தங்களும்
மாட்டிகளிலிடப்பட்ட ஆடைகள்
உராயும் சப்தங்களும்
செவிப்பறைகளில் வந்து விழும்
அன்னியோன்யமற்ற அமைதிகளில்
ஆர்ப்பரித்த காலமெல்லாம்
அது ஒரு காலமென்றாகிப் போனது
கதறும் அலாரச் சப்தங்களும்
இங்கொன்றும் அங்கொன்றுமாய்
கரைந்து குரைத்து உறுமிச் செல்லும்
இரவு ஜுவிகளின்
இணக்கமற்ற இம்சைகளும்
ஒரு கணமாச்சும் எனனை திசை திருப்ப
ஓராயிரம் மறை படுத்தித்தான் எடுக்கின்றன
விட்டம் பார்த்து குத்திட்ட கண்கள்
புரளலின்றி நேர்த்தியான் நீட்டலில்
அம்சமாய் அடங்கியிருக்கும் உடல்
தொடையேறிய இரவாடையையும்
இழுக்க மறந்து
இறுக்கிப் பிடித்தமர்ந்திருக்கும் கரங்கள்
ஏறக்குறைய பிணத்தின் சாயலென்றாலும்
தொண்டைக்கும் வயிற்றுக்குமான
இடைப்பட்ட பகுதி மட்டும்
இன்னும் இல்லையென்றிருக்கிறது
கண் இறுக்கி மூடிய பின்னும்
இமைகளின் உட்புறத்தில் ஒளிந்து நிற்கிறாய்
இம்சித்தல் எங்கள் குலத்தொழிலென்று
கொக்கரித்தபடி
ஒவ்வொரு முதல் காதலிக்குப் பின்னும்
ஒவ்வொரு இரண்டாம் காதலிக்கு முன்னும்
இடைப்பட்ட இப்படியான இருண்ட காலங்கள்
இம்சிக்காமல் விடுவதில்லை
இப்படியான முதல் காதலர்களை.
எஸ்.எம். ஜுனைத் ஹஸனீ.
Wednesday, September 24, 2008
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
i`m your permanent reader now
Post a Comment