Saturday, July 19, 2008
அலையுங்கள்!அலசுங்கள்!
உள்ளதை உள்ளபடி
உற்று நோக்குவதில்
சிறப்பென்ன உள்ளது!
கிளியை கிளியென்றிருந்தால்
அர்ச்சுனனும் இன்று
அரியா சுனன்தான்
பத்தோடு செல்லும் ஓநாய்களில்
பதினோராவது ஓநாய்
அரபி காட்டுமிராண்டியென்று
சென்றிருந்தால் முஹம்மது
விதி நொந்து
நாம் வீடுகளின்
நாய் தரிக்குமிடங்களிலெல்லாம
ஒரு அரபி நின்றிருப்பான்
அங்கங்கள் குலுங்க
தங்க மாந்தர்தம் செல்ல
கை கால் முளைத்த
இரண்டாம் மனித ஜாதியன்றி
வேறில்லையென்பவனை
ஆண்மையற்றவனென்று
அகிலமும் இகிழுரைக்கும்
பொருளை பொருளாயில்லாமல்
அதன் அருளின்
ஆழம் நோக்குங்கள்
கனம் உருட்டும் சக்கரங்களாய்
மனித கால்களையும்
கனி கொய்யும் துரட்டிகளாக
மனித கரங்களையம்
சுற்றிய உங்களருட்பார்வை
வற்றிப் போகாமல
சுற்ற விடுங்கள்
உலகம் சுற்றி.
எஸ்.எம்.ஜுனைத் ஹஸனி
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
தம்பி,உன் கவிதைகளில் நான் நோக்கினேன் -உள்ளபடி உன் உள்ளம் படித்தேன்!மாற்றம் வேண்டும்,பழயவை மாறவேண்டும் -என நீ எண்ணும் எண்ணமனைவருக்கும் வேண்டும்.தம்பி நீ இன்னும் பல கவி புனைய வேண்டும் அதன் மூலம் சமுதாய இருள் நீங்க வேண்டும் என வேண்டும் அண்ணன்.
Post a Comment